அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : 26 காளைகளை அடக்கியதிருநாவுக்கரசு விஜய் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை அடக்கிய திருநாவுக்கரசு விஜய் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு பெற்றனர்.
மதுரை
பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாட்டின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர், பார்வையாளர் என 58 பேர் காயம் அடைந்துள்ளனர்.இதன் 8 சுற்றுகள் நிறைவு பெற்றது. 520 காளைகள் பங்குபெற்றன 420 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - சிறந்த வீரர்கள் திருநாவுக்கரசு, மற்றும் விஜய் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு பெற்றனர்.
சிறந்த காளை - ஜி.ஆர் கார்த்திக் காளை தேர்வு பெற்றது.
Related Tags :
Next Story