தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு


தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 17 Jan 2021 12:50 PM GMT (Updated: 17 Jan 2021 12:50 PM GMT)

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு சீராக குறைந்து வருவது மக்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.

சென்னை, 

 தமிழகத்தில் இன்று 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 30 ஆயிரத்து 772 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் தற்போது 5,940 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 770 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 12 ஆயிரத்து 568 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 264 ஆக அதிகரித்துள்ளது.


Next Story