“நாளை அரசியல் முடிவு எடுக்க போகிறோம்” - பா.ம.க. அறிவிப்பு


“நாளை அரசியல் முடிவு எடுக்க போகிறோம்” - பா.ம.க. அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Jan 2021 12:26 AM GMT (Updated: 24 Jan 2021 12:26 AM GMT)

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் விஷயத்தில் நாளை அரசியல் முடிவு எடுக்க உள்ளதாக பா.ம.க. அறிவித்துள்ளது.

சென்னை,

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் விஷயத்தில் அரசியல் முடிவு எடுப்பதற்காக பா.ம.க. நிர்வாக குழு அவசர கூட்டம் நாளை (திங்கட்கிழமை) 11 மணிக்கு இணைய வழியில் நடக்கிறது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து விவாதித்து அரசியல் முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story