அதிமுக அலுவலகத்திற்கு செல்வீர்களா ? - "கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்க...!- சசிகலா


அதிமுக அலுவலகத்திற்கு செல்வீர்களா ? - கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்க...!- சசிகலா
x
தினத்தந்தி 8 Feb 2021 1:50 PM GMT (Updated: 8 Feb 2021 1:56 PM GMT)

அதிமுக அலுவலகத்திற்கு செல்வீர்களா என்ற கேள்விக்கு சசிகலா பொறுத்திருந்து பாருங்கள் என கூறினார்

சென்னை

வாணியம்பாடியில் சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தொண்டர்களுக்காக தீவிர அரசியலில் ஈடுபடுவேன்.எம்.ஜி.ஆர். வழிவந்த ஒருதாய் வயிற்று பிள்ளைகள் ஒற்றுமையாக  ஓரணியில் நின்று பொது எதிரியை சந்திக்க ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.தமிழுக்கும் , தமிழக மக்களுக்கும் , தொண்டர்களுக்கும் நான் அடிமை. ஆனால் அடக்கு முறைக்கு நான் என்றும் அடிபணிய மாட்டேன் .

புரட்சி தலைவர் நாமம் வாழ்க; புரட்சி தலைவி நாமம் வாழ்க, வாழ்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற  கழகம்: வளர்க தமிழகம் 

ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது ஏன் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் என கூறினார்.

அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என உங்கள் மீது அமைச்சர்கள் தொடர்ந்து  புகார் கொடுக்கிறார்கள் என்ற கேள்விக்கு அது அவர்கள் பயத்தைகாட்டுகிறது என கூறினார்.

அதிமுக அலுவலகத்திற்கு செல்வீர்களா என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என கூறினார்

அதிமுகவை கைபற்றுவீர்களா என்ற கேள்விக்கு மிக விரைவில் உங்களை சந்திக்கிறேன் அப்போது விரிவாக பேசுகிறேன். என கூறினார்.



Next Story