சென்னையில் இருந்து திரும்பும் போது சேப்பாக்கம் மைதானத்தை படம் பிடித்த பிரதமர் மோடி!
சென்னையில் இருந்து திரும்பும் போது பிரதமர் மோடி, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை படம் பிடித்துள்ளார்.
சென்னை,
பிரதமர் மோடி இன்று சென்னை வருகை தந்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். சென்னை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் கேரள மாநிலம் புறப்பட்டார்.
சென்னையில் இருந்து செல்லும் போது, இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை பிரதமர் மோடி படம் பிடித்துள்ளார். இந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக பதிவிட்டுள்ளார்.
Caught a fleeting view of an interesting test match in Chennai. 🏏 🇮🇳 🏴 pic.twitter.com/3fqWCgywhk
— Narendra Modi (@narendramodi) February 14, 2021
Related Tags :
Next Story