கேரளாவில் இருந்து நீலகிரி வரும் சுற்றுலா பயணிகளுக்கு ‘கொரோனா இல்லை’ சான்றிதழ் கட்டாயம்


கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
x
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
தினத்தந்தி 25 Feb 2021 2:42 AM GMT (Updated: 25 Feb 2021 2:42 AM GMT)

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினமும் 15-க்கும் கீழ் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது.

தற்போது கேரளாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அந்த மாநில எல்லையை ஒட்டி நீலகிரி மாவட்டம் அமைந்து இருப்பதால், அங்கிருந்து வருகிறவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறும்போது, ‘கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு குறிப்பாக கேரள சுற்றுலா பயணிகள் கொரோனா பரிசோதனை எடுத்து, தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை கட்டாயம் நீலகிரிக்குள் கொண்டு வர வேண்டும். என்றார்.

Next Story