தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு அழைப்பு


தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு அழைப்பு
x
தினத்தந்தி 4 March 2021 3:59 AM GMT (Updated: 4 March 2021 3:59 AM GMT)

தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு அழைப்பு.

சென்னை, 

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் ஈ.ஆர். ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இணைந்தது. அந்த தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டது. தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட அக்கட்சியின் வேட்பாளர் சின்ராஜ் வெற்றி பெற்று எம்.பி.யானார்.

இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு வருமாறு அந்த கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு இன்று வருகை தந்து, டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் வழங்க தி.மு.க. தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story