தேனி- போடியில் அதிமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 3 April 2021 4:13 AM GMT (Updated: 3 April 2021 4:13 AM GMT)

அதிமுகவை சேர்ந்த தேனி மாவட்ட அம்மா மாவட்ட பேரவை பொருளாளர் குறிஞ்சிமணியின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

தேனி,

தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், அரசியல் கட்சியினர் மக்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

தேர்தல் ஆணையத்தினர் பறக்கும்படைகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல வருமான வரித்துறையினரும் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில்  தேனி மாவட்டம் போடியில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அலுவலகம் அருகே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  அதிமுகவை சேர்ந்த தேனி மாவட்ட அம்மா மாவட்ட பேரவை பொருளாளர் குறிஞ்சிமணியின் வீட்டில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.  

Next Story