"தமிழகத்தில் ஐந்து நாட்கள் மழை பெய்யும்" - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகத்தில் ஐந்து நாட்கள் மழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 12 April 2021 6:36 AM GMT (Updated: 12 April 2021 6:36 AM GMT)

தமிழகத்தில் ஐந்து நாட்கள் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து அதிகரிக்க தொடங்கியது. ஒவ்வொரு நாளும் வெயிலின் கோரத்தாண்டவத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை பிற்பகல் நேரங்களில் தவிர்த்து வந்தனர். அதிலும் கடந்த மாதம் இறுதியில் இயல்பை விட வெப்பத்தின் அளவு அதிகமாக பதிவானது.

வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், தற்போது கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஆங்காங்கே சாரல் மழை முதல் லேசான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி வரையிலான 4 நாட்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காற்று மண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஐந்து நாட்கள் மழை பெய்யும் என்றும் வரும் 14 முதல்  தென் தமிழக மாவட்டங்களில் மூன்று நாட்கள் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Next Story