ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையென்பது நேர்மையான, நியாயமான தேர்தல்களில்தான் நிலைகொண்டுள்ளது - மு.க.ஸ்டாலின்
ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையென்பது நேர்மையான, நியாயமான தேர்தல்களில்தான் நிலைகொண்டுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசிய குற்றச்சாட்டை விசாரித்த இந்திய தேர்தல் கமிஷன் அவர் 24 மணி நேரம் பிரசாரம் செய்ய அதிரடியாக தடை விதித்துள்ளது. மேற்கு வங்காள தேர்தலில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கே பிரசாரம் செய்ய ஒருநாள் தடை விதித்திருக்கும் நடவடிக்கை மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் மம்தா பானர்ஜிக்கே பிரசாரம் செய்ய ஒருநாள் தடை விதித்தது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையென்பது நேர்மையான, நியாயமான தேர்தல்களில்தான் நிலைகொண்டுள்ளது. அனைத்துக் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பினை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். ஒருசார்பின்மை மற்றும் நடுநிலை கடைப்பிடிக்கப்படுவதையும் உறுதிசெய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The faith in our democracy rests on free and fair elections.
— M.K.Stalin (@mkstalin) April 13, 2021
The Election Commission of India must ensure a level playing field for all parties and candidates and ensure that impartiality and neutrality is maintained.#MamataBanerjee
Related Tags :
Next Story