கொரோனாவுக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி


கொரோனாவுக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி
x
தினத்தந்தி 14 April 2021 11:07 PM GMT (Updated: 14 April 2021 11:07 PM GMT)

நெல்லை மாவட்டம் உவரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

நெல்லை, 

கன்னியாகுமரி மாவட்டம் சித்தவிளையைச் சேர்ந்தவர் கார்லோஸ் (வயது 58). இவர் நெல்லை மாவட்டம் உவரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கொரோனா நோய் தொற்று காரணமாக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இறந்த சப்-இன்ஸ்பெபக்டர் கார்லோஸ்க்கு, செல்வி என்ற மனைவி உள்ளார். இவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு டெரிசா (27), ஜெரிசா (25) என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் டெரிசா டாக்டராகவும், ஜெரிசா என்ஜினீயராகவும் உள்ளனர்.

Next Story