பாளையங்கோட்டை சிறையில் கைதி மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை


பாளையங்கோட்டை சிறையில் கைதி மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை
x
தினத்தந்தி 26 April 2021 12:05 AM GMT (Updated: 26 April 2021 12:05 AM GMT)

பாளையங்கோட்டை சிறையில் கைதி மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு.

சென்னை, 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைதிகளிடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளம் நடுத் தெருவை சேர்ந்த முத்து மனோ என்ற கைதி அடித்து கொலை செய்யப்பட்டார்.

காதல் தகராறில் பிளஸ்-2 மாணவரை அரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் முத்து மனோவின் கூட்டாளிகள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து 7 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த விவகாரத்தில் சிறை அதிகாரிகள், காவலர்கள் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி நேற்றிரவு உத்தரவு பிறப்பித்தார்.

Next Story