ஊரடங்கு காரணமாக திருச்சியில் இரவில் விமானங்கள் இயங்க தடை


ஊரடங்கு காரணமாக திருச்சியில் இரவில் விமானங்கள் இயங்க தடை
x
தினத்தந்தி 28 April 2021 10:55 PM GMT (Updated: 28 April 2021 10:55 PM GMT)

ஊரடங்கு காரணமாக திருச்சியில் இரவில் விமானங்கள் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

செம்பட்டு, 

திருச்சி விமான நிலைய ஓடுதளம் பலப்படுத்தும் பணி நடைபெற்று வந்ததால் இரவு 11.30 மணி முதல் காலை 8 மணி வரை விமானங்கள் தரை இறங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. 

இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை விமானகள் இயக்க விமான நிலைய ஆணையத்தின் சார்பில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரக்கட்டுப்பாடு ஆனது நேற்று இரவு முதல் நடைமுறைக்கு வருவதாகவும் மறு அறிவிப்பு வரும் வரை இந்த நிலை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story