தமிழக அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் சண்முகம்


தமிழக அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் சண்முகம்
x
தினத்தந்தி 3 May 2021 8:42 AM GMT (Updated: 3 May 2021 8:42 AM GMT)

தமிழக அரசின் ஆலோசர் பதவியை சண்முகம் ராஜினாமா செய்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, வரும் 7 ஆம் தேதி தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். 

இந்த நிலையில், தமிழக அரசின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து முன்னாள் தலைமைச்செயலாளர் சண்முகம் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சனுக்கு சண்முகம் அனுப்பியுள்ளார்.

Next Story