மே 05: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இரண்டாவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்துள்ளது.
சென்னை,
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.
நாடு முழுதும் வைரஸ் பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மே மாதம் வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. இதன்படி சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.55 ரூபாய், டீசல் லிட்டர் 85.90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. (17 நாட்களுக்குப் பிறகு நேற்று விலை உயர்த்தப்படிருந்தது)
இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. இதன்படி இன்று பெட்ரோல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டர் 92.70 ரூபாய்க்கும், டீசல் விலை 19 காசுகள் உயர்ந்து லிட்டர் 86.09 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
Related Tags :
Next Story