மு.க.ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்து ‘‘பேரிடரில் இருந்து மீள்கின்ற நன்னாளுக்கு இந்தப் பெருநாள் துணையாகட்டும்’’


மு.க.ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்து ‘‘பேரிடரில் இருந்து மீள்கின்ற நன்னாளுக்கு இந்தப் பெருநாள் துணையாகட்டும்’’
x
தினத்தந்தி 14 May 2021 3:09 AM GMT (Updated: 14 May 2021 3:09 AM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில், பேரிடரில் இருந்து அனைவரும் மீள்கின்ற நன்னாளுக்கு இந்தப் பெருநாள் துணையாகட்டும் என்று கூறியுள்ளார்.

சென்னை, 

தியாகமும், ஈகையும் இணைந்த மார்க்க நெறியினைப் பின்பற்றி வாழும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு என் இனிய ரம்ஜான்நல்வாழ்த்துகள். தமிழக மக்களுக்கே உரிய பெருமைக்குரிய பண்பாடான அனைத்து மத சகோதரத்துவம்என்றென்றும் நீடித்து நிலைத்திருக்கும் வகையில், இந்தப் பெருநாள் அமையட்டும்.

அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து பெருநாளை கொண்டாட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சிறுபான்மை சமுதாய மக்களுக்கும், தி.மு.க.வுக்கும் என்றும் தொப்புள் கொடி உறவு உள்ளது. தலைவர் கருணாநிதியும், நானும் என்றும் இஸ்லாமிய சமுதாய மக்களின் மேல் பேரன்பு கொண்டவர்கள்.

பேரிடரில் இருந்து மீள்கின்ற நன்னாள்

தி.மு.கழக அரசு இஸ்லாமிய பெருமக்களுக்கு எந்நாளும் பாதுகாப்பு அரணாக விளங்கும் என்பதை இந்த இனிய நன்னாளில் மீண்டும் உறுதிப்படுத்த விழைகிறேன்.

பேரிடரில் இருந்து அனைவரும் மீள்கின்ற நன்னாளுக்கு இந்தப் பெருநாள் துணையாகட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story