கட்சிக்காக கஷ்டப்பட்டு இருக்கிறோம் தொண்டரிடம், சசிகலா பரபரப்பு பேச்சு


கட்சிக்காக கஷ்டப்பட்டு இருக்கிறோம் தொண்டரிடம், சசிகலா பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 10 Jun 2021 8:01 PM GMT (Updated: 10 Jun 2021 8:01 PM GMT)

‘‘கட்சிக்காக அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம்’’, என்று தொண்டரிடம், சசிகலா பேசும் ஆடியோ பதிவு வெளியாகி உள்ளது.

சென்னை,

அரசியலில் இருந்து விலகி இருக்கப்போகிறேன் என்று அறிவித்த சசிகலா, தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசும் ஆடியே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் என்ற தொண்டரிடம், சசிகலா பேசும் ‘ஆடியோ' ஒன்று நேற்று வெளியானது. உரையாடல் விவரம் வருமாறு:-

சசிகலா:- உங்க கடிதமெல்லாம் பார்த்தேன். கொரோனா காலத்துல கடிதம் எப்படி சரியாக போகுமானு தெரியல... அதனால் தான் போன்ல பேசிக்கிட்டு இருக்கேன்.

தொண்டர்:- உங்களை போல அம்மாவுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்தவங்க யாருமே இருக்கமுடியாதும்மா?

சசிகலா:- தொண்டர்கள் எல்லாத்துக்கும் அது தெரியுது. கட்சிக்காரங்களுக்கு அது நல்லாவே புரியுது.

‘நிச்சயமா வரேன்’

தொண்டர்:- நீங்க உங்க உடம்ப பாத்துக்கோங்கம்மா?

சசிகலா:- உடல்நிலை நல்லா இருக்கு. ஒன்னும் பிரச்சினை இல்ல. 4 வருடம் தமிழ்நாட்டுல இல்லைனாலும், தொண்டர்களோட கடிதங்களுக்கு தொடர்ந்து பதில் அளிச்சுட்டுத்தான் இருந்தேன்.

தொண்டர்:- இப்போ நீங்க மறுபடியும் கட்சிக்கு வரவேண்டியது மட்டும் தான் பாக்கி

சசிகலா:- வரேன். வரேன். நிச்சயமா வரேன்.

தொண்டர்களின் மனகுமுறல்

தொண்டர்:- உங்கள மாதிரி வாழ்க்கையை தியாகம் செய்தவங்க யாருமில்ல. இப்போ எதிரிங்க கை ஓங்கிடுச்சு.

சசிகலா:- கட்சியை நல்லபடியாக கொண்டுவரணும். அவ்வளவுதான். அ.தி.மு.க.வுக்காக அவ்வளவு கஷ்டப்பட்டுருக்கோம். அதை என் உயிரில் இருந்துகூட பிரிக்கவே முடியாது. அப்படி இருக்கும்போது தொண்டர்களின் மனகுமுறலை கேட்டுக்கிட்டு என்னால் சும்மா உட்கார்ந்திருக்க முடியுமா?

தொண்டர்:- இனியாவது நல்லவங்களை நம்பி சேருங்க. கட்சிக்காக உழைச்சவங்களையே இன்னிக்கு நீ யாருனு கேட்டுக்கிட்டு இருக்காங்க.... நன்றி விசுவாசமானவங்கள மட்டும் இனி கூப்பிடுங்க..

சசிகலா:- சரி.... சரி... சரி...

இவ்வாறு அந்த உரையாடல் நிறைவடைகிறது.

Next Story