திருவள்ளூரில் டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் வழிப்பறி - விற்பனை பணம் ரூ.2.78 லட்சம் கொள்ளை


திருவள்ளூரில் டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் வழிப்பறி - விற்பனை பணம் ரூ.2.78 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 11 July 2021 10:31 AM GMT (Updated: 11 July 2021 10:31 AM GMT)

திருவள்ளூரில் டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்காத்தாகுளம் டாஸ்மாக் மேற்பார்வையாளரான சீனிவாசன், நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு விற்பனை பணத்துடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது லட்சிவாக்கம் அருகே ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் இருவர் சீனிவாசனை வழிமறித்து தாக்கியுள்ளனர்.

இதையடுத்து அவரிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story