மதுரையில் கடந்த 8 மாதங்களில் 165 போக்சோ வழக்குகள் பதிவு
மதுரையில் கடந்த 8 மாதங்களில் 165 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை,
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு திருமணம் நடத்துவது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அந்த வகையில் மதுரையில் கடந்த 8 மாதங்களில் மகளிர் காவல் நிலையங்களில் மட்டும் மொத்தம் 165 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் மதுரை நகரில் 8 வழக்குகள், தெற்குவாசலில் 6 வழக்குகள், தல்லாகுளம் பகுதியில் 15 வழக்குகள், திருப்பரங்குன்றத்தில் 11 வழக்குகள் என மாநகர் பகுதிகளில் மொத்தம் 95 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன.
மதுரை புறநகர் மற்றும் ஊரக பகுதிகளான திருமங்கலத்தில் 22 வழக்குகள், மேலூரில் 9 வழக்குகள், உசிலம்பட்டியில் 6 வழக்குகள், ஊமச்சிகுளம் பகுதியில் 9 வழக்குகள், சமயநல்லூரில் 14 வழக்குகள், பேரையூரில் 10 வழக்குகள் என மொத்தம் 70 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதுமட்டுமின்றி 18 வயது நிரம்பாத சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைத்ததாக 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story