தமிழகத்தில் வரும் 19ந்தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் வரும் 19ந்தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 17 Sep 2021 7:35 AM GMT (Updated: 17 Sep 2021 7:35 AM GMT)

தமிழகத்தில் வரும் 19ந்தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.




சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், தமிழகத்தில் வரும் 19ந்தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்து உள்ளது.  இதன்படி அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் 19ந்தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும்.  வரும் 20ந்தேதி தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அதேபோல் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.


Next Story