“பண்டிகைக் காலம்: மக்கள் கவனமாக இருக்க வேண்டும்” - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன்


“பண்டிகைக் காலம்: மக்கள் கவனமாக இருக்க வேண்டும்” - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 16 Oct 2021 6:17 PM GMT (Updated: 16 Oct 2021 6:17 PM GMT)

பண்டிகை காலங்கள் வர இருப்பதால் மக்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 380 கோடி ருபாய் மதிப்பீட்டில் மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இதனை இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன், விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், தினமும் அரசு நடத்தும் முகாம்களில் கலந்து கொண்டு அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். அதே நேரம் வரக்கூடிய பண்டிகைக் காலங்களில் போக்குவரத்திலும், குழுவாக செயல்படும் இடங்களிலும் மக்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர், தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் கண்காணிப்பு தொடரும் என்று கூறினார்.

Next Story