திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள், வழக்கு தொடர உரிமை இல்லை - சென்னை ஐகோர்ட்டு


திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள், வழக்கு தொடர உரிமை இல்லை - சென்னை ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 5 Nov 2021 9:25 AM GMT (Updated: 5 Nov 2021 11:39 AM GMT)

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர சட்டரீதியாக் உரிமை இல்லை என சென்னை ஐகோர்ட்டு கூறி உள்ளது.

சென்னை


ஜோசப் பேபி என்பவருடன் சேர்த்து வைக்க கோரி  கலைச்செல்வி என்பவர்  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்திய நாதன், விஜயகுமார் அடங்கிய அமர்வு  திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர சட்டரீதியாக உரிமை இல்லை  என கூறினர்.

பணம் கொடுக்கல் வாங்கலில்  தொடர்பான  முன் விரோதம் காரணமாக  வழக்கு தொடர்ந்ததால் மனுதள்ளுபடி செய்யப்பட்டது.

Next Story