வேளாண் சட்டங்கள் ரத்து சந்தர்ப்பவாத செயல்; கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு
புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவது சந்தர்ப்பவாத செயல் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டாக தெரிவித்துள்ளார்.
சென்னை,
நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு இந்த 3 வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்படும் என அறிவித்துள்ளது. இதனை அடுத்து பல்வேறு அரசியல் தலைவர்கள் இந்த அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
எனினும், சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டங்கள் தொடரும் என விவசாய அமைப்புகள் கூறி வருகின்றன. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இதுபற்றி கூறும்போது, 5 மாநில தேர்தலை மையமாக வைத்துதான் 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
எனினும் கூட 5 மாநிலங்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற முடியாது என தெரிவித்துள்ளார். மேலும் விவசாய சட்டங்கள் தற்பொழுது திரும்ப பெறுவது என்பது ஒரு சந்தர்ப்பவாத செயல் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Related Tags :
Next Story