தமிழகத்தில் மேலும் 741 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் குழந்தைகள் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. 741 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் குழந்தைகள் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. 741 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 548 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 421 ஆண்கள், 320 பெண்கள் என மொத்தம் 741 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 114 பேரும், கோவையில் 119 பேரும், செங்கல்பட்டில் 76 பேரும், ஈரோட்டில் 63 பேரும், நாமக்கலில் 43 பேரும், சேலத்தில் 39 பேரும், திருப்பூரில் 57 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 5 கோடியே 26 லட்சத்து 29 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36 ஆயிரத்து 401 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 808 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story