வாட்ஸ் அப் மூலம் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் கைது


வாட்ஸ் அப் மூலம் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2022 8:08 PM GMT (Updated: 9 Jan 2022 8:08 PM GMT)

வாட்ஸ் அப் மூலம் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் கைது போக்சோ சட்டத்தில் போலீசார் நடவடிக்கை.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த தீபாலபட்டியைச் சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 37). இவர் உடுமலை அருகே கரட்டுமடத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதே பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவிக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். இது போன்று தொடர்ச்சியாக குறுஞ்செய்திகளை அனுப்பி மாணவியிடம் ஆசிரியர் பழகி வந்துள்ளார். இதனை அந்த மாணவியின் சகோதரி கண்டுபிடித்து தனது உறவினரிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிரியர் அசோக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story