தேசிய மகளிர் ஆணையம் நடிகர் சித்தார்த்துக்கு கண்டனம்
தேசிய மகளிர் ஆணையம் நடிகர் சித்தார்த்துக்கு கண்டனம்.
சென்னை,
பஞ்சாப்பில் பிரதமர் நரேதிர மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதை பிரபல பேட்மிண்டன் விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் கண்டித்து இருந்தார். “எந்த நாட்டிலும் பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்படுமானால் அந்த நாடு பாதுகாப்பாக இருப்பதாக கருத முடியாது. பிரதமர் மோடி மீது நடத்திய கோழைத்தன தாக்குதலை கண்டிக்கிறேன்’’ என்று அவர் கூறினார்.
இதற்கு பதிலடியாக நடிகர் சித்தார்த் வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் சாய்னா நேவாலை ஆபாச வார்த்தைகளால் இழிவுபடுத்தியதாக எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. தேசிய மகளிர் ஆணையமும் சித்தார்த்தை கண்டித்ததுடன் சாய்னா நேவாலை அவமதிக்கும் வகையில் பதிவு வெளியிட்ட சித்தார்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மராட்டிய மாநில டி.ஜி.பி.க்குகடிதம் அனுப்பி உள்ளது.
பஞ்சாப்பில் பிரதமர் நரேதிர மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதை பிரபல பேட்மிண்டன் விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் கண்டித்து இருந்தார். “எந்த நாட்டிலும் பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்படுமானால் அந்த நாடு பாதுகாப்பாக இருப்பதாக கருத முடியாது. பிரதமர் மோடி மீது நடத்திய கோழைத்தன தாக்குதலை கண்டிக்கிறேன்’’ என்று அவர் கூறினார்.
இதற்கு பதிலடியாக நடிகர் சித்தார்த் வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் சாய்னா நேவாலை ஆபாச வார்த்தைகளால் இழிவுபடுத்தியதாக எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. தேசிய மகளிர் ஆணையமும் சித்தார்த்தை கண்டித்ததுடன் சாய்னா நேவாலை அவமதிக்கும் வகையில் பதிவு வெளியிட்ட சித்தார்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மராட்டிய மாநில டி.ஜி.பி.க்குகடிதம் அனுப்பி உள்ளது.
Related Tags :
Next Story