பூந்தமல்லி: மெட்ரோ கட்டுமான பணியில் ஈடுபட்ட 26 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று..!
பூந்தமல்லியில் மெட்ரோ கட்டுமான பணியில் ஈடுபட்ட 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பூந்தமல்லி,
போரூரில் இருந்து பூந்தமல்லி வரை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இதில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கும் பணியில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் நசரத்பேட்டை பகுதியில் தங்கியிருந்த மெட்ரோ ரெயில் பணியாளர்கள் 126 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் 26 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட ஊழியர்கள் தனிமைப்படுத்தட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
Related Tags :
Next Story