வாணியம்பாடி அருகே சாலையோரம் நின்ற லாரி திருட்டு - போலீசார் விசாரணை...!
வாணியம்பாடி அருகே சாலையோரம் நின்ற லாரியை திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி டோல் கேட் பகுதியில் நேற்று அதிகாலை டீக்கடையில் லாரி டிரைவர் ஒருவர் டீ குடித்து விட்டு வருவதற்குள், மர்ம நபர் ஒருவர் லாரியை கடத்திச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் அப்பகுதி முழுவதும் லாரியை தேடி பார்த்து உள்ளார். ஆனால் லாரி கிடைக்கவில்லை.
பின்னர் இது குறித்து லாரியின் டிரைவர் கொடுத்த புகாரி போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் லாரியை திருடி சென்ற ராஜ்குமார் என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்,
வாணியம்பாடி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 30) என்பவர் ஹாலோ பிளாக் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். தனது நிறுவனத்தின் தேவைக்காக லாரியை திருடிச்சென்று வள்ளிப்பட்டு பகுதியில் மறைத்து வைத்து லாரியின் கலரை மாற்ற முயற்சி செய்துள்ளார்.
இது குறித்து ரகசிய தகவல் கிடைத்த தனிப்படை போலீசார் விரைந்து சென்று லாரியை திருடிச் சென்ற ராஜ்குமாரை கைது செய்தனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story