திருவள்ளூர்: மின்சார ரெயிலில் இருந்த தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு...!
திருவள்ளூர் அருகே மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்து உள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தரணிவராகபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருண் குமார் (23). இவர் திருத்தணியில் இருந்து புறநகர் மின்சார ரெயிலில் திருவள்ளூர் அடுத்த புட்லூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு நேர்காணலுக்கு வந்துள்ளார்.
அப்போது ஏகாட்டூர் ரெயில் நிலைய அருகே ஓடும் ரெயிலிலிருந்து தவறி விழுந்ததில் ரெயில் சக்கரத்தில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அருண் குமார் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story