மது விற்ற 22 பேர் கைது


மது விற்ற 22 பேர் கைது
x

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார். இதையொட்டி கடந்த 13-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 258 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story