மின் இணைப்புடன் 2.49 கோடி பேர் ஆதாரை இணைத்துள்ளனர்: செந்தில் பாலாஜி


மின் இணைப்புடன் 2.49 கோடி பேர் ஆதாரை இணைத்துள்ளனர்: செந்தில் பாலாஜி
x

தமிழகத்தில் இதுவரை 2.49 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை ,

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 2811 மின் வாரிய அலுவலகங்களில் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இணையதளம் மட்டுமின்றி, மின்வாரிய அலுவலகங்களிலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை 2.49 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story