விருதுநகரில் நடைபெறும் 2-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் - தங்க அணிகலன், தங்கத் தகடு கண்டெடுப்பு


விருதுநகரில் நடைபெறும் 2-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் - தங்க அணிகலன், தங்கத் தகடு கண்டெடுப்பு
x

அகழாய்வில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமான தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு 16 அகழாய்வுக் குழுகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமான தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தங்கத்தால் ஆன 2 கிராம் பட்டையான தோடு, தங்கத் தகடு மற்றும் தலா 2.2 கிராம் அளவில் தங்க குமிழ் வடிவிலான பொருள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் வந்து அகழாய்வுப் பணிகளை பார்த்துச் செல்கின்றனர்.



Next Story