வீடு புகுந்து பொருட்களை சேதப்படுத்திய 3 பேர் கைது


வீடு புகுந்து பொருட்களை சேதப்படுத்திய 3 பேர் கைது
x

நெல்லை அருகே வீடு புகுந்து பொருட்களை சேதப்படுத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை அருகே உள்ள சீவலப்பேரி பால்கணபதியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40). இவர் ஒரு பெண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த அந்த பெண்ணின் தந்தை, சண்முகத்தை கண்டித்தார்.

இதையடுத்து, அந்த பெண்ணின் உறவினர்கள் சிலர், சண்முகம் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கி இருந்த மிக்சி, டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்டவைகள் சேதப்படுத்தியும், ரூ.28,500-ஐ எடுத்துக் கொண்டும், ஆட்டோவை சேதப்படுத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சண்முகம் சீவலப்பேரி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story