ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது


ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 7 Jan 2023 7:30 PM GMT (Updated: 7 Jan 2023 7:30 PM GMT)

சேலம் சூரமங்கலம் பகுதியில் ரேஷன் அரிசியை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

சேலம் சூரமங்கலம் பகுதியில் ரேஷன் அரிசியை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

சேலம் பள்ளப்பட்டி, சூரமங்கலம், ஜாகீர் ரெட்டிப்பட்டி பகுதிகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்தப்படுவதாக சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஜாகீர்ரெட்டிப்பட்டி அம்பேத்கர் தெருவில் சிலர் மினி லாரியில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றி கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதையடுத்து மினி லாரியில் இருந்த 7 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து அந்த அரிசி சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக நடத்திய விசாரணையில், சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு ரேஷன் அரிசியை கடத்த லாரியில் ஏற்றியது தெரியவந்தது.

3 பேர் கைது

இந்த கடத்தலில் ஈடுபட்டதாக ரெட்டிப்பட்டி டாக்டர்ஸ் காலனியை சேர்ந்த ராமஜெயம் (வயது 51), பழைய சூரமங்கலத்தை சேர்ந்த லட்சுமணன் (26), ஓமலூர் செல்லப்பிள்ளைகுட்டையை சேர்ந்த ராஜேந்திரன் (43) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களுக்கு 7 டன் அளவுக்கு ரேஷன் அரிசி எப்படி கிடைத்தது? ரேஷன் கடையில் இருந்து கடத்தி வந்தார்களா? அல்லது பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கினார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Related Tags :
Next Story