லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது


லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
x

லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

நாகப்பட்டினம்

தலைஞாயிறு போலீஸ் சரக பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தலைஞாயிறு போலீசார் அருந்தவம்புலம் கடைத்தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நீர்மூளை செம்பிய விளாக பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது60) என்பதும், வெளி மாநில லாட்டரி சீட்டு விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கீழ்வேளூர் போலீஸ் சரகம் ஆழியூரில் போலீசார் நடத்திய சோதனையில், ஆழியூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முகமது உசேன் மகன் அக்பர் அலி (32) என்பவர் லாட்டரி சீட்டு் விற்றது தெரியவந்தது. அதேபோல் கீழ்வேளூர் பேரூராட்சி கச்சனம் சாலை சந்திப்பில் உள்ள பழக்கடையில் போலீசார் நடத்திய சோதனையில் கீழ்வேளூர் வடக்கு மடவிளாகம் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (44) என்பவர் லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அக்பர் அலி, கார்த்திகேயன் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.900-ஐ பறிமுதல் செய்தனர்.


Next Story