3,135 மாணவ-மாணவிகள் எழுதினர்


3,135 மாணவ-மாணவிகள் எழுதினர்
x

6 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வினை 3,135 மாணவ-மாணவிகள் எழுதினர்.

விருதுநகர்

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், திருத்தங்கல், சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள 6 மையங்களில் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 3,135 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் 303 பேர் எழுதவில்லை. தேர்வு மையங்களில் கடுமையான சோதனைகளுக்கு பின்பே மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களின் விவரங்கள் ஹால் டிக்கெட்டில் முறையாக தெரிவிக்கப்படாததால் பல மாணவர்கள் குழப்பத்துக்குள்ளாகி தவிக்கும் நிலை ஏற்பட்டது.



Next Story