320 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
உடன்குடியில் 320 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தட்டி அய்யன் ஆகியோர் உடன்குடி கீழபஜாரில் திடீர் சோதனை செய்தனர். அப்போது, 40 கிலோ எடை கொண்ட 8 மூட்டைகளில் மொத்தம் 320 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. உடனடியாக போலீசார் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து ரேஷன் அரிசியை பதுக்கியதாக உடன்குடி கிறிஸ்டியாநகரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் மோகன்ராஜ் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் ரேஷன் அரிசி மூட்டைகளை குறைந்த விலைக்கு வாங்கி, வடமாநிலத்தினரிடம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story