மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 327 மனுக்கள் பெறப்பட்டன


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 327 மனுக்கள் பெறப்பட்டன
x

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 327 மனுக்கள் பெறப்பட்டன

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக அமைக்கப்பட்டிருந்த இடத்துக்கு சென்று அவர்களிடமிருந்து 47 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல், கடனுதவி கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மற்றும் காவல் துறை தொடர்பான மனுக்கள் என மொத்தம் 280 மனுக்களை பெற்றுக்கொண்டார். மனுக்கள் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) ஹஜிதா பேகம், உதவி ஆணையர்(கலால்) ராஜவேல் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story