மது விற்ற 36 பேர் கைது


மது விற்ற 36 பேர் கைது
x

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 36 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி கடந்த 10-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை போலீசார் சோதனை மற்றும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இருந்தனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 36 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 511 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story