மதுபானம் விற்ற 36 பேர் கைது


மதுபானம் விற்ற 36 பேர் கைது
x
தினத்தந்தி 1 May 2023 6:45 PM GMT (Updated: 1 May 2023 6:45 PM GMT)

தேனி மாவட்டத்தில் மதுபானம் விற்ற 36 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுவிற்பனை நடந்து வருகிறது. இதை தடுக்க மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து சென்ற போது சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்ததாக பலர் சிக்கினர். அந்த வகையில், தேனி பகுதியில் மதுவிற்ற சமதர்மபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 55), பாரஸ்ட்ரோடு 5-வது தெருவை சேர்ந்த ராமர் (46), அல்லிநகரத்தை சேர்ந்த மணி (36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 36 பேர் கைதாகினர். அவர்களிடம் இருந்து 484 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story