உயர்கல்வி நிறுவன தர வரிசையில் மாநிலக்கல்லூரிக்கு 3-வது இடம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி


உயர்கல்வி நிறுவன தர வரிசையில் மாநிலக்கல்லூரிக்கு 3-வது இடம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி
x

உயர்கல்வி நிறுவன தர வரிசையில் மாநிலக்கல்லூரிக்கு 3-வது இடம் கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,

மத்திய கல்வி அமைச்சகத்தின் தரவரிசை பட்டியல் 2022-ல் பல்வேறு பிரிவுகளில் தலைசிறந்த இடங்களை பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

உயர்கல்வியில் திராவிட மாடலின் மாட்சிக்கு இது ஒரு சிறந்த அங்கீகாரம். அதுவும் இந்த தரவரிசை பட்டியலானது நாம் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடும் இன்று வெளியாகியிருப்பது சாலப் பொருத்தமானது.

குறிப்பாக, இந்தியாவிலேயே 3-வது சிறந்த கல்லூரி என்ற பெரிய பெருமையை நான் பயின்ற மாநிலக்கல்லூரி பெற்றிருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்த சாதனைக்கு காரணமான கல்லூரி நிர்வாகத்துக்கும், ஆசிரிய பெருமக்களுக்கும், மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story