4 ஆழ்குழாய் கிணறுகளில் மின் வயர்கள் திருட்டு


4 ஆழ்குழாய் கிணறுகளில் மின் வயர்கள் திருட்டு
x

4 ஆழ்குழாய் கிணறுகளில் மின் வயர்கள் திருட்டு போனது.

புதுக்கோட்டை

கீரமங்கலம் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயத்திற்காக ஆழ்குழாய் கிணறுகள் அதிகமாக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக விவசாய ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மூழ்கி மோட்டார்கள் இயக்க பயன்படும் மின் வயர்களை மர்ம நபர்கள் இரவு நேரங்களில் துண்டித்து அறுத்துச் செல்கின்றனர். சில ஆண்டுகளில் நூறுக்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகளில் வயர்கள் திருடப்பட்டுள்ளது. இதே போல நேற்று முன்தினம் இரவு கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தை சேர்ந்த ரெங்கன், இன்பசேகரன், கொத்தமங்கலம் கிழக்கு பகுதியை சேர்ந்த ராஜாக்கண்ணு, ஆறுமுகம் ஆகிய விவசாயிகளின் தோட்டங்களில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் பொருத்தப்பட்டுள்ள நீர்மூழ்கி மோட்டார் மின் வயர்களை துண்டித்து மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். நேற்று காலை தோட்டத்திற்கு வந்து பார்த்த போது வயர்கள் திருடப்பட்டுள்ளதை பார்த்து விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் சில வருடங்களாக இதே போல ஆழ்குழாய் கிணறுகளில் மின் வயர்கள் திருடப்படுவது வழக்கமாக உள்ளது. இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story