காலில் எலும்புமுறிவு ஏற்பட்ட மாட்டுக்கு 4 வகையான அறுவை சிகிச்சை


காலில் எலும்புமுறிவு ஏற்பட்ட மாட்டுக்கு 4 வகையான அறுவை சிகிச்சை
x

காலில் எலும்புமுறிவு ஏற்பட்ட மாட்டுக்கு 4 வகையான அறுவை சிகிச்சை ்ளிக்கப்பட்டது.

வேலூர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வெள்ளகுட்டை கிராமத்தை சேர்ந்தவர் பாபு. விவசாயி. இவர் காளை மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். அவர் மாடு விடும் விழாவுக்காக காளையை தயார் படுத்தி வந்தார். பல போட்டிகளில் அவரது காளை கலந்து கொண்டு முதல்பரிசை வென்றுள்ளது. எனவே அந்த மாட்டுக்கு வெள்ளகுட்டை பைபாஸ் என்று பெயரிட்டு அழைத்து வந்தனர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் பெத்தூர் என்ற பகுதியில் சமீபத்தில் நடந்த எருதுவிடும் திருவிழாவில் கலந்து கொண்டு இலக்கை நோக்கி ஓடியது. அதில் முதல்பரிசை வென்றது. ஆனால் மாடு ஓடியபோது திடீரென மாட்டின் கால் முறிந்து எலும்பு இரண்டு துண்டாகியது.

படுகாயமடைந்து உயிருக்கு போராடிய மாட்டினை வேலூர் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். மாட்டினை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாட்டுக்கு அறுவை சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். அதன்படி டாக்டர் நாசர் தலைமையில் டாக்டர் ரவிசங்கர் மற்றும் குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

மாட்டின் காலில் இரும்பு ராடு மற்றும் பிளேட் ஆகியவை அறுவை சிகிச்சைகள் மூலம் பொருத்தப்பட்டது. மேலும் கால் நரம்பு சிதைவு ஏற்பட்டிருந்ததால் அதற்கும் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

இதுதவிர, கால் பகுதியில் சதைகள் முற்றிலுமாக சிதைந்திருந்ததால் தொடையில் இருந்து சதைகள் எடுத்து காலில் பொருத்தி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த மாட்டுக்கு மேற்கொள்ளப்பட்ட 4 வகை அறுவை சிகிச்சையும் முதன் முதலாக புதிய முயற்சியாக மேற்கொள்ளப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


Next Story