தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை


தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
x

தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் தியாகி குமரன் காலனியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 50). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் கடந்த 8-9-2021 அன்று 9 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தார். இதுகுறித்து கொங்குநகர் மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அண்ணாமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அண்ணாமலைக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு அஜராகி வாதாடினார். சிறப்பாக புலன் விசாரணை செய்த மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசாரை கமிஷனர் ஏ.ஜி.பாபு பாராட்டினார்.


Related Tags :
Next Story