டாஸ்மாக் ஊழியரை தாக்கிய 5 வாலிபர்கள் கைது


டாஸ்மாக் ஊழியரை தாக்கிய 5 வாலிபர்கள் கைது
x

திண்டுக்கல் அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கிய 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் ராமையன்பட்டி டாஸ்மாக் கடையில் வேடசந்தூர் குடப்பத்தை சேர்ந்த முத்துக்குமாரவடிவேல் (வயது 42) விற்பனையாளராக உள்ளார். கடந்த 1-ந்தேதி டாஸ்மாக் கடை அருகே மது அருந்திய 2 தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதைக்கண்ட முத்துக்குமாரவடிவேல் அவர்களை தடுக்க முயன்றார். அப்போது ஒரு தரப்பினர் மதுபாட்டிலால் முத்துக்குமாரவடிவேலை தாக்கியதுடன் 2 மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடினர்.

இதில் காயமடைந்த முத்துக்குமாரவடிவேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமையன்பட்டியை சேர்ந்த எடிசன்ராஜ் (29), காமாட்சிபுரத்தை சேர்ந்த வேளாங்கண்ணி (33), பெரியபள்ளப்பட்டியை சேர்ந்த கவுரிசங்கர் (20), பிரவீன்குமார் (23), பாலமுருகன் (23) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story