50 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரம் வேருடன் பிடுங்கி மறுநடவு
செந்துறை அருகே 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரம் வேருடன் பிடுங்கி மறுநடவு செய்யப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொய்யாதநல்லூர் கிராமத்தில் செக்கான்குட்டை உள்ளது. இங்கு 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆல மரம் இருந்தது. இந்த மரம் தற்போது அரியலூர்- செந்துறை சாலையின் 4 வழிச்சாலை விரிவாக்க பணியின் காரணமாக அகற்றப்பட இருந்தது. இதனை அறிந்த இளைஞர்கள் பசுமை சூழல் அறக்கட்டளை, சோலைவனம் தன்னார்வ அணியினர் இணைந்து அந்த ஆல மரத்தை கிட்டாச்சி எந்திரங்களின் உதவியுடன் வேருடன் பிடுங்கி செக்கான்குட்டை பகுதியில் நட்டனர். இளைஞர்களின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
Related Tags :
Next Story