சூதாடிய 6 பேர் கைது


சூதாடிய 6 பேர் கைது
x

சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உடையார்பாளையம் அரண்மனை காடு பகுதியில் சிலர் சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்று பார்த்தபோது, அங்கு உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த சூரியமூர்த்தி மகன் நிர்மல்குமார் (வயது 26), புதுத்தெருவை சேர்ந்த பரமசிவம் மகன் அசோக்ராஜ் (33), 3 சென்ட் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சந்தோஷ் (29), புதுத்தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் பிரதாப் (23), காதர் ஷரிப் மகன் முஸ்தபா (23) மற்றும் ராஜேந்திரன் மகன் அருண்குமார் (25) ஆகியோர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் 6 பேர் மீது உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தார். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.2,180 மற்றும் 2 சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.


Next Story