6 வயது மகள் பிளேடால் கழுத்தை அறுத்து கொலை: இளம்பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை


6 வயது மகள் பிளேடால் கழுத்தை அறுத்து கொலை: இளம்பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
x

6 வயது மகள் பிளேடால் கழுத்தை அறுத்து கொலை: இளம்பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு.

சென்னை,

பெங்களூருவைச் சேர்ந்தவர் பவித்ரா (வயது 25). குடும்ப பிரச்சினை மற்றும் மன அழுத்தத்தில் இருந்து வந்த அவர், கடந்த 2019-ம் ஆண்டு இவர் தனது மகள் தனுஷ்யாஸ்ரீ (6), மகன் பரமேஷ் (3) ஆகியோருடன் மெரினா கடற்கரைக்கு வந்தார்.

கடற்கரை பகுதியில் மகளின் கழுத்தை பிளேடால் அறுத்தார். இதில், தனுஷ்யாஸ்ரீ உயிரிழந்தார். இதன்பின்பு மகனை கொலை செய்வதற்காக பிளேடால் கழுத்தில் அறுத்தார். மேலும், தன்னைத்தானே பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

இதைப்பார்த்த அந்த வழியாக வந்த குதிரை ஓட்டிகள் அவர்களை மீட்டு ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின்பு பவித்ரா, அவரது மகன் பரமேஷ் ஆகியோர் உயிர் பிழைத்தனர்.

இதுகுறித்து மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து பவித்ராவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, 'பவித்ரா தனது மகளை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றசெயலில் ஈடுபடவில்லை என்பதும், குடும்ப பிரச்சினை மற்றும் மன அழுத்தம் காரணமாக அவர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரிகிறது.

எனவே, பவித்ராவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,500 அபராதமும் விதிக்கப்படுகிறது. உயிர்பிழைத்த சிறுவனின் மறுவாழ்வுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.


Next Story