75-வது சுதந்திர தினம்: இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி


75-வது சுதந்திர தினம்: இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி
x

75-வது சுதந்திர தினத்தையொட்டி இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

சென்னை,

நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர தினம் நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. பிரதமர் மோடி இந்த 75-வது சுதந்திர தினத்தை நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் விமர்சையாக கொண்டாட வேண்டும் எனவும், அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு வீட்டிலும் மூன்று நாட்களுக்கு தேசிய கொடியை பறக்க விடவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை பொதுமக்கள் அனைவரும் இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.


Next Story