குளச்சல் அருகே 840 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


குளச்சல் அருகே  840 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x

குளச்சல் அருகே 840 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

குளச்சல்,

குளச்சல் அருகே 840 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ரேஷன் அரிசி பறிமுதல்

கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் மரிய ஸ்டெல்லா, தனி வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரொனால்டு ஆகியோர் நேற்று மாலை குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கொட்டில்பாடு பகுதியில் சென்றபோது, அங்கு ஒரு தென்னந்தோப்பில் 40 பிளாஸ்டிக் சாக்குகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து குளச்சல் சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன் ஜோஸ்லின், தேவராஜ் ஆகியோர் உதவியுடன் அங்கு பதுக்கி வைத்திருந்த 840 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர், அவற்றை உடையார்விளையில் உள்ள அரசு நுகர்வோர் வாணிபக்கழக குடோனில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.


Next Story